சுயமே வரம்!
"ஏய், சாயந்தரம் சீக்கிரம் வந்துருடி, ஜோசியரை பாக்க போகணும்!" "உன் இஷ்டத்துக்கு வரதுக்கு உன் புருஷனா எனக்கு வேல குடுத்திருக்காரு! வேல முடிஞ்சதும் வரேன், மீட்டிங் ஏதும் இருந்தா கஷ்டம்." அலுவலகம் செல்ல நிதானமாய் புறப்பட்டுக் கொண்டிருந்தவள் அம்மாவிடம் அவசரமாய் கிளம்புவதாய் காட்டிக்கொண்டே பேசினாள். சமீபமாய் வீட்டில் தொடங்கி இருந்த கல்யாண பேச்சுகள் கீதாவின் இயல்பை மாற்றி இருந்தன. "மரியாதையா பேச மாட்டியாடி மூதேவி?" "யம்மோ, காலங்காத்தால ஆபீஸ் போறப்ப என்ன டென்ஷன் பண்றதுக்குன்னே வருவியா நீ?" "கத்தாதடி. உங்கப்பா காதுல விழுந்தா கோவப்படப்போறாரு!" "ஆமாம், அவரு அப்டியே சாந்த சொரூபி. என்னால தான் கோவப்படப்போறாரு பாரேன். தலையெழுத்துன்னு நீ இருக்கலாம். என்னால அப்டி எல்லாம் இருக்க முடியாது! உனக்கென்ன இப்ப, எவன்கிட்டயாவது என்ன தள்ளி விட்டுட்டு நீங்க நிம்மதியா இருக்கணும், அதுக்கு நான் சீக்கிரம் வரணும். அவ்ளோதானே, வந்து தொலையுறேன். வழிய விடு!" கீதா இப்படி ஒன்றும் அசட்டையாய் பேசுபவளில்லை. இந்த பெற்றோர்களின் கடமை ஆற்ற